Saved in:
Bibliographic Details
Main Author: Shanlax
Format: Recurso digital
Language:English
Published: Zenodo 2025
Online Access:https://doi.org/10.5281/zenodo.15394893
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Table of Contents:
  • <p>விழாக்களும் சடங்குகளும் பண்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றன. இன்னும் பண்பாடு என்றாலே இவையிரண்டும்தான் என்று நினைக்குமளவிற்கு தமிழ்ப் பண்பாட்டோடு தொடர்புடையதாக இருக்கின்றன. மனிதனுடைய அதிகப்படியான உழைப்பும் அந்த உழைப்பின் இறுதியில் விழாக்களின் வழி அதைக் கொண்டாடுவதும் அடுத்தகட்ட உழைப்புக்கு அக்கொண்டாட்டத்தை மூலதனமாக்குவதும் வழக்கமாக இருக்கின்றது. இயல்பாயமைந்த இத்தகைய வழக்கங்கள் ஒட்டு மொத்தச் சமூக மேம்பாட்டிற்கு வழிவகுப்பவை, சமூக ஒற்றுமையை முன்னிறுத்தியவை, முரண்பாடுகளை மறக்கடிக்கச்செய்பவை. அவ்வகையில் மதுரை சித்திரைத் திருவிழா நகர்ப்புறத்தில் நடந்தாலும் நாட்டுப்புறத் திருவிழாவாகவே இன்றும் மிளிர்வதை மிக்கேல் பக்தினின் சிந்தனைகளோடு இணைத்துப் பார்க்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது. இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள மிக்கேல் பக்தினின் சிந்தனைகள் கலை இலக்கியக் கோட்பாடு என்கிற நூலிலுள்ள முனைவர் இ. முத்தையாவின் கட்டுரைச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை. இக்கட்டுரை மிக்கேல் பக்தினின் சிந்தனைகள், விழாக்களோடு பக்தினின் சிந்தனைகளைப் பொருத்திப் பார்த்தல் என்கிற இருநிலைகளில் அமைகிறது.  </p>